Ticker

10/recent/ticker-posts

ஏர் அஸ்தானா விமானம் கஸகஸ்தானில் இருந்து இலங்கைக்கு

 ஐரோப்பாவில் ஆரம்பமாகியுள்ள குளிர்காலத்தை முன்னிட்டு, கஸகஸ்தானிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவந்த முதலாவது விமானம் நேற்று (25) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்தது. 

கஸகஸ்தானின் அல்மாட்டி (Almaty) சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் அஸ்தானா (Air Astana) நிறுவனத்திற்குச் சொந்தமான KC-167 ரக விமானம் மூலமாக இன்று மாலை 4.10 PM மணியளவில் இச்சுற்றுலாப் பயணிகள் குழுவினர் நாட்டை வந்தடைந்தனர். 

இவ்விமானத்தில் 182 பயணிகளும் 08 பணிக்குழாமினரும் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த விமான சேவையானது வாரந்தோறும் திங்கள் மற்றும் வியாழக்கிழமை என்று 02 நாட்கள், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை கஸகஸ்தானின் அல்மாட்டியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments