ஈரானிய மனித உரிமை ஆர்வலரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான நர்கீஸ் முகமதி ஈரானில் கொடூரமான முறையில் கைது செய்யப்பட்டார் என்று நோபல் குழு தெரிவித்துள்ளது.
மேலும் அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் பரிசை வழங்கும் நோபல் குழு கூறியுள்ளது.
இஸ்லாமிய குடியரசுக்கெதிராக பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் முகமதி முன்னர் பல தண்டனைகளை அனுபவித்துள்ளார்.
பெண்களின் உரிமை
கடந்த வருட இறுதியில், மருத்துவ சிகிச்சைக்காக சிறைத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட பின்னர், அவர் ஈரானின் எவின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
ஈரானில் பெண்களின் உரிமைகள் மற்றும் மரண தண்டனை ஒழிப்புக்கான 03 தசாப்த கால பிரசாரத்தைத் தொடர்ந்து, முகமதிக்கு 2023 ஆம் ஆண்டில் இவ்விருது வழங்கப்பட்டது.
"முகமதியின் இருப்பிடத்தை உடனடியாக தெளிவுபடுத்தவும், அவருடைய பாதுகாப்பு மற்றும் நேர்மையை உறுதிப்படுத்தவும், நிபந்தனைகள் இல்லாமல் அவரை விடுவிக்கவும் ஈரானிய அதிகாரிகளை நோர்வே நோபல் குழு கேட்டுக் கொண்டுள்ளது" என்று விருது அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு
இந்த வருடம் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற வெனிசுலாவின் மரியா கொரினா மச்சாடோ தனது விருதைப் பெறுவதற்காக நோர்வேக்கு வந்த ஒரு நாளுக்குப் பின்னர் இக்கைது நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments