Ticker

10/recent/ticker-posts

இன்று முதல் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குக் கொடுப்பனவு.

நிலவும் அனர்த்த நிலைமை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படவுள்ள 5,000 ரூபாய் போசாக்குக் கொடுப்பனவை வழங்கும் பணிகள் இன்று (16) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. 

இத்திட்டத்தின் உத்தியோகப்பூர்வ ஆரம்ப நிகழ்வு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தலைமையில் இன்று காலை 9.30 AM மணிக்கு வெள்ளவத்தை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நடைபெறவுள்ளது. 

2025 நவம்பர் 30 ஆம் திகதி வரை மகப்பேறு சிகிச்சை நிலையங்களில் பதிவு செய்துள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஒரு முறை மாத்திரம் இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


Post a Comment

0 Comments