Ticker

10/recent/ticker-posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு*
இன்று (30) நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியும். மேலும் பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


மழை பெய்யக்கூடிய மாகாணங்கள் & மாவட்டங்கள்:
• வடக்கு மாகாணம்
• கிழக்கு மாகாணம்
• ஊவா மாகாணம்
• மாத்தளை மாவட்டம்
• நுவரெலியா மாவட்டம்
• பொலன்னறுவை மாவட்டம்

மேற்கண்ட பகுதிகளின் சில இடங்களில் 50 mm இற்கும் அதிகமான பலத்த மழை பொழியக் கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அடிக்கடி மழை பெய்யக்கூடிய மாவட்டங்கள்:
• கண்டி
• அநுராதபுரம்

2.00 PM மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிவதற்கு சாத்தியமுள்ள மாகாணங்களாக,
• சப்ரகமுவ மாகாணம்
• தென் மாகாணம்
• களுத்துறை மாவட்டம்

பலத்த காற்று வீசக்கூடிய பகுதிகள் :
• மத்திய மலைநாட்டின் கிழக்குச் சரிவுப் பகுதிகள்
• ஹம்பாந்தோட்டை மாவட்டம்
• மொனராகலை மாவட்டம்
• அம்பாறை மாவட்டம்
மணித்தியாலத்திற்கு சுமார் 40 km வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

மூடுபனி ஏற்படக்கூடிய பகுதிகள் (அதிகாலை நேரம்) :
• சப்ரகமுவ மாகாணம்
• மத்திய மாகாணம்
• காலி மாவட்டம்
• மாத்தறை மாவட்டம்

எச்சரிக்கை அறிவிப்பு :
இடியுடன் கூடிய மழை பொழியும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும்.
இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments