Ticker

10/recent/ticker-posts

ஜனவரி முதல் கல்வி சீர்திருத்தம் நடைமுறைக்கு சாத்தியமில்லை

 எதிர்வரும் 2016 ஜனவரி மாதம் முதல் புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மூச்சுத் திட்டத்தின் கீழ், ஹெம்மாத்தகம பிரதேச வைத்தியசாலைக்கு 28 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வைத்தியசாலை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (24) இடம்பெற்றது. 

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மக்களுடையதும், பாடசாலை மாணவர்களுடைய தும் மனநிலைகள் குறித்து நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

அவர்களுடைய அடிப்படை உரிமைகளை மீறக் கூடாது. பாடசாலைக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் சரியான திட்டமொன்று இல்லாமையால் பிள்ளைகள் பாதிப்பட்டுள்ளனர். 

அரசாங்கம் விரும்புவது போன்று ஜனவரி முதல் புதிய சீர்திருத்தங்களை அமுல்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பதால், இது குறித்து சிந்தித்துப் பார்த்து நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறேன். 

இந்த தருணத்தில் மக்கள் எந்தளவுக்கு உதவியற்றவர்களாக காணப்படுகின்றனர் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். 

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கூற்றுப் பிரகாரம், இப்பேரழிவால் 374,000 பேருடைய தொழில்கள் இழக்கப்பட்டுள்ளன. 

23% விவசாய காணிகளும் 35% ஆன தேயிலைத் தோட்டங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. 

மாதத்திற்கு ரூபாய் 48 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 

சிறிய தேயிலைத் தோட்டங்களின் உரிமையாளர்களின் தேயிலை காணிகள்கூட அழிந்துபோயுள்ளன. 

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் வழிமுறைமைக்கேற்ப நடந்து கொள்ள வேண்டுமென்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.


Post a Comment

0 Comments