நாட்டில் இன்று திங்கட்கிழமை (15) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலையானதி 3,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 342,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 314,200 ஆயிரம் ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
இதேவேளையில், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,750 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,275 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Comments