'தித்வா' புயலினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்திருந்த நாவலப்பிட்டி - கண்டி பிரதான வீதி 18 நாட்களுக்குப் பின்னர் போக்குவரத்து பாவனைக்காக இன்று (15) திறக்கப்பட்டுள்ளது.
வீதியில் வீழ்ந்திருந்த மண் அகற்றப்பட்டு வீதி சீரமைக்கப்பட்டுள்ளதுடன், வீதிக்கு மேலுள்ள மண்மேடு சரிந்து விழும் அபாயம் காணப்படுவதனால், அதற்கு நிரந்தரத் தீர்வு காணும் வரை போக்குவரத்துக்கேற்ற வகையில் பாதுகாப்பாக வீதி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடத்தில் பணிகள் நிறைவடையும் வரை அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை சாரதிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.
அத்துடன், இவ்வீதியில் கனரக வாகனப் போக்குவரத்திற்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, உலப்பனை - கண்டி வீதியின் புனரமைப்புப் பணிகளை இன்னும் ஒரு வாரத்தில் நிறைவு செய்து போக்குவரத்திற்காகத் திறக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments