Ticker

10/recent/ticker-posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு.

இன்று வியாழக்கிழமை (01) வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 mm இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பொழியக் கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 PM மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக் கூடும். 

சப்ரகமுவ மற்றும் மத்திய ஆகிய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலைமை காணப்படலாம். 

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைத்துக் கொள்ளும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை மேலும் அறிவுறுத்தியுள்ளது.



Post a Comment

0 Comments