Ticker

10/recent/ticker-posts

நடிகை ராணியை வலைவீசி தேடும் பொலிஸார்

'அலைகள்' என்ற சீரியல் மூலமாக பிரபலம் பெற்றவர்தான் நடிகை ராணி. அதனை தொடர்ந்து அத்திப்பூக்கள், முன் ஜென்மம், வள்ளி, குலதெய்வம் போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்திருந்தார். பல சீரியல்களில் வில்லியாகவும் நடித்து மிரட்டியிருப்பார். 

அப்படி அவர் நல்ல கதாபாத்திரத்தில் நடித்த சீரியல் என்றால் சன் டிவியில் ஒளிபரப்பான 'ரோஜா' சீரியலை குறிப்பிடலாம். 

இவர் இந்தியாவின் கரூரில் ஹோட்டல் அதிபர் ஒருவரிடம் ரூபாய் 10 இலட்சம் மற்றும் கார் உள்ளிட்டவற்றை மோசடி செய்துள்ளதாக புகார் வந்துள்ளது. இதனையடுத்து, சீரியல் நடிகை ராணி மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட சில பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள ராணியை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Post a Comment

0 Comments