நியூயோர்க் மேயராக இந்திய வம்சாவளியினரான மம்தானி இன்று வியாழக்கிழமை (01) பதவியேற்றார்.
நியூயோர்க் மேயராக பதவியேற்கும் முதலாவது முஸ்லிம் மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்தவர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
புத்தாண்டு நாளான இன்று (01) நியூயோர்க்கில் கைவிடப்பட்ட வரலாற்றுச் சிறப்புடைய பழைய சிட்டி ஹால் சுரங்கப் பாதை ரயில் நிலையத்தில் வைத்தே இவர் மேயராகப் பதவியேற்றுள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக அல்-குர்ஆன் மீது சத்தியப் பிரமாணம் செய்து இவர் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பதவியேற்ற பின்னர் மம்தானி தெரிவித்ததாவது, நியூயோர்க் நகரின் மேயராகப் பதவியேற்பதை வாழ்நாள் மரியாதையாகவும், பாக்கியமாகவும் கருதுகிறேன் என்று தெரிவித்தார்.
ஹமாஸ் ஆதரவாளராகவும், கம்யூனிச சித்தாந்தங்களை பின்பற்றுபவராகவும் அறியப்படுகின்ற மம்தானிக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments