Ticker

10/recent/ticker-posts

விவாகரத்து கேட்ட மனைவியை சுட்டுக் கொன்ற கணவன்.

இந்தியாவின் கர்நாடகாவில் விவாகரத்து கேட்ட மனைவியை வீதியில் வைத்து கணவன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த 39 வயதான புவனேஷ்வரி என்பவர் பெங்களுரில் வங்கி மேலாளராக பணியாற்றி வருபவர். 

இவருடைய கணவர் பாலமுருகன் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். கணினி தொழிநுட்ப துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இத்தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

புவனேஷ்வரி கணவர் பாலமுருகனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பாலமுருகன் வேலை முடிந்து வீடு திரும்பிய மனைவி புவனேஷ்வரியை வீதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதனையடுத்து கையில் துப்பாக்கியுடன் பாலமுருகன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். படுகாயமடைந்த புவனேஷ்வரி குறித்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவருடைய உடலைக் கைப்பற்றிய பொலிஸார் தமிழ்நாட்டிலுள்ள அவருடைய  பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


 

Post a Comment

0 Comments