உலக சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ள நிலையில், இலங்கையில் இன்று (24) தங்கத்தினுடைய விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 4,500 அமெரிக்க டொலர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு தங்கச் சந்தையில் இன்று புதன்கிழமை (24) தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கப் பவுன் (8 கிராம்) ஒன்றின் விலை இன்று ரூபாய் 354,000 ஆகப் பதிவாகியுள்ளது. நேற்று செவ்வாக்கிழமை (23) இதன் விலை ரூ. 352,000 ஆகக் காணப்பட்டது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று ரூபாய் 2,000 அதிகரித்துள்ளது.
அதேபோன்று, 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலையானது இன்று ரூபாய் 327,500 ஆக பதிவாகியுள்ளது. நேற்று இதன் விலை சுமார் ரூபாய் 325,600 ஆகவும் காணப்பட்டது. இதுவும் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பைக் காட்டுகின்றது.

0 Comments