நாடு முழுவதுமுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (16) முதல் மீண்டும் திறக்கப்படும் நிலையில் 640 பாடசாலைகள் நாளை திறக்கப்பட மாட்டாது என்று கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மத்திய மாகாணத்தில் 111 பாடசாலைகளும், ஊவா மாகாணத்தில் அதிகபட்சமாக 524 பாடசாலைகளும், வடமேல் மாகாணத்தில் 05 பாடசாலைகளும் திறக்கப்பட மாட்டாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இவற்றை தவிர ஏனைய அனைத்துப் பாடசாலைகளிலும் கல்விச் செயற்பாடுகள் நாளை (16) முதல் வழமை போன்று இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments