இந்தியாவின் தமிழகத்தில் தனது நண்பனின் சடலத்தை பார்த்து கதறியழுத நண்பன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்தியா, தமிழகத்தின் திருச்சி கே. கள்ளிக்குடியைச் சேர்ந்தவர் செல்வம் (55). இவரும் ஜி நகரைச் சேர்ந்த பாஸ்கரனும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். கொத்தனாரான செல்வத்திற்கு திருமணமாகி மனைவி மற்றும் 02 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஜூன் 03 ஆம் திகதி கொத்தனார் செல்வம் வேலை செய்து கொண்டு இருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
தனது நெருங்கிய நண்பர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு அர்ச்சியடைந்து ஓடி வந்த பாஸ்கரன், செல்வத்தின் உடலைப் பார்த்துக் கதறியழுததுடன் திடீரென பாஸ்கரனும் அதே இடத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக, அங்கிருந்தவர்கள் பாஸ்கரனை மீட்டு அருகே உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். வைத்தியசாலையில் பாஸ்கரனை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
நண்பனை விட்டு மரணத்திலும் பிரியாத பாஸ்கரனின் இழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
https://chat.whatsapp.com/IvGnuu6qf5r127XGL76Oyd
0 Comments